இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2-ஆம் தேதி சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து கங்குலி வீடு திரும்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று வியாழக்கிழமை ஸ்டெண்டிங் செய்யப்படும் என்று கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனை புதன்கிழமை தெரிவித்தது.
கங்குலி மருத்துவ ரீதியாக நல்ல நிலையில் உள்ளார். அவர் நன்றாக தூங்கி உணவு சாப்பிட்டார். அவர் இன்னும் ஒரு நாள் மருத்துவமனையில் தங்க விரும்பினார். எனவே அவர் இன்று வீட்டிற்கு செல்வார். இது அவரது தனிப்பட்ட முடிவு “என்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரூபாலி பாசு கூறியிருந்தார்.